பொங்கல் வெளியீடு டீ.எம் கிருஷ்ணா பாடிய சென்னை புறம்போக்கு பாடல்
சென்னை புறம்போக்கு பாடல் சென்னையின் அழிந்துகொண்டிருக்கும ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு ஒரு அஞ்சலி. புறம்போக்கு என வர்ணிக்க படும் இந்த பங்கு-பயன்பாட்டிலுள்ள இடங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை, நம் நகரமும் வெள்ளம், புயல், வரதச்சியை போன்ற இயற்கை பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால், புறம்போக்கு என்ற அழகான சமூக சொத்தை குறிப்பிடும் வார்த்தை எப்போ உதவாக்கரை, வேஸ்ட் என்ற அர்த்தத்திற்கு தேய்ந்ததோ, அதை ஒட்டியே அரசு துறைகளும் நகர திட்டமிடும் நிறுவனங்களும் புறம்போக்கு இடங்களை, பிரித்து தனியார் மற்றும் அரசு கம்பெனிகள் கையில் உப்படைக்க ஆரம்பித்துவிட்டார்.
"சென்னை புறம்போக்கு பாடல்" தமிழகத்தின் பொறுப்பற்ற, திறனற்ற ஊழல் மிகுந்த அரசு நிறுவனங்களை பற்றியான ஒரு விமர்சனம். அவர்களின் மௌனத்தாலும் செயல்களாலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை குழுமமும், சென...
