இந்திய உயர்கல்வியில் புதிய அத்தியாயம்: ஏ.ஐ. மையப்படுத்தப்பட்ட திருவான்மியூர் வளாகத்தை திறந்துவைத்த ஸ்ரீதர் வேம்பு – உலகத் தரக் கல்விக்கான வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய முன்னேற்றம்
இந்திய உயர்கல்வியில் புதிய அத்தியாயம்: ஏ.ஐ. மையப்படுத்தப்பட்ட திருவான்மியூர் வளாகத்தை திறந்துவைத்த ஸ்ரீதர் வேம்பு – உலகத் தரக் கல்விக்கான வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய முன்னேற்றம்
சென்னை, ஜூலை 11:
இந்திய உயர்கல்வி துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த கற்றல் முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக, வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது புதிய ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து (Vertical) பல்கலைக்கழக வளாகத்தை சென்னையின் திருவான்மியூரில் திறந்து வைத்துள்ளது. நாட்டிலேயே இந்த வகையில் உருவாக்கப்பட்ட முதல் கல்வி வளாகமாக இது கருதப்படுகிறது.
இந்த புதிய வளாகத்தை, Zoho நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். உலகளாவிய கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழாவி...
