நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன்
இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் கண்ணாடி இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். நாயகியாக அன்யா சிங் நடிக்கிறார் இவர்களுடன் கருணாகரன், ஆனந்ராஜ், முரளி ஷர்மா , பூர்ணிமா பாக்கியராஜ் ,பிரகதி மற்றும் பலர் நடிப்பில் தமன் யாசியில் உருவாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இன்று நடந்த கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :-
பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:-
இந்த திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே தெலுங்கில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சந்தீப், இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தெலுங்கு படைப்பை தயாரிக்கிறார். த்ரில்லர், காதல் போன்ற வணிக ரீதியாக மட்டுமல்லாமல் இயல்பாகவே இப்படத்தை...

