மரண தண்டனையின் மறுபக்கம் பேசும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ – ஜூன் 25-ல் திரைக்கு வரும் தயாள் பத்மநாபனின் வித்தியாசமான படைப்பு!
மரண தண்டனையின் மறுபக்கம் பேசும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ – ஜூன் 25-ல் திரைக்கு வரும் தயாள் பத்மநாபனின் வித்தியாசமான படைப்பு!
தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்புகள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், இயக்குநர் தயாள் பத்மநாபனின் புதிய திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ரசிகர்களிடையே தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூன் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் தரமான மற்றும் கருத்துள்ள திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது 22வது திரைப்படமாகவும், தமிழில் மூன்றாவது படமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், ஒரு மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் நிகழும் ஒரே இரவை மையமாகக் கொண்டு மனித மனத...
