பழம்பெரும் ஹிந்தி நடிகை மீனாகுமாரி பிறந்த தினம்
இவர் தன் வாழ்நாளில் ஏறத்தாழ 92 படங்களில் நடித்துள்ளார்.. இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது தந்தை நாடகக் கவிஞராகவும் உருது மொழிப் புலவராகவும் விளங்கினார்.
இந்தி திரையுலகில் “சோகங்களின் அரசி” (குயின் ஆஃப் டிராஜிடி) என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பத்து ஐந்து ஆகி விட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையாகும்.
வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரா ன இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்த போது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம்செய்து கொள்வதற்குமுன் இக்பால்பேகம் என்ற பெயரி ல் பிரபாவதி முஸ்லீமாக மதம் மாறி னார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மும் பையில் ரூப்தாரா பிலிம் ஸ்டுடியோ அருகில் குடியிருந் ததால் இவர்களது இரண்டாவது ...