எம்.ஜி.ஆரை சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நாளின்று
1967-ம் வருஷம் ஜனவரி 12-ம் தேதி ஈவ்னிங் 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி. ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிகிட்டிருந்தாங்க. இந்த சந்திப்பின் போது என்ன நடந்துச்சுன்னு தெரியலை.. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து ராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அப்பாலே செங்கல்பட்டு அமர்வு ந...