கதாநாயகியாக திருநங்கையை தேர்வு செய்தது ஏன்..? ; மம்முட்டி
தமிழில் இயக்குனர் ராம் டைரக்சனில் பேரன்பு என்கிற படத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றுவரும் இந்தப்படம் கொடைக்கானலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். இந்த அஞ்சலி தவிர இன்னொரு அஞ்சலியும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். முழுப்பெயர் அஞ்சலி அமீர்.. இவர் ஒரு திருநங்கை ஆவார்..
பொதுவாகவே திருநங்கைகளை ஏளனமாகவே பார்க்கும் இந்த ஊரில் இயக்குனர் ராமும் ஒரு திருநங்கைக்கு கதாநாயாகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என மம்முட்டியே கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அங்கே வந்திருந்த அழகான திருநங்கைகள் பலரை மம்முட்டி பார்த்து ஆச்சர்யப்பட்டாராம்.
அவர்கள் எல்லாம் பாலின மாற்று அறுவை சிகிசை செய்துகொண்டவர்கள் என தெரியவந்ததால். பேரன்பு படத்தில் அப்படி ஒரு திருநங்கை கதா...
