கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே தணிக்கை சான்றிதழை பெற்ற பத்மாவதி
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.
இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்வர் உள்ளிட்ட வட மாநிலத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர. இதையடுத்து கடந்த டிசம்பரில் வெளியாக இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டது.
130 கோடியில் உருவான இந்த படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிய பின்பு படம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தணிக்கை குழுவில் இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தில் இருந்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் ம...