ரஜினி மற்றும் கமலுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் போர்க்கொடி
ரஜினி, கமல் உட்பட யார் அரசியல் கட்சி தொடங்கினாலும் ஆதரிக்க மாட்டேன்’’என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாட்டின் குடிமகனாக கேள்வி எழுப்புவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த விமர்சனத்துக்கும் பயப்பட மாட்டேன். அதேபோல், எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டேன். என்னிடம் 3 வீடுகள் உள்ளன. பண்ணை வீடும் இருக்கிறது. முதலீடுகளும் உள்ளன. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன். நடிகன் என்ற புகழை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன். அரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும். ரஜினி, கமல், பவன் கல...
