நடிகை ரெஜினாவுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை
பெண்கள் எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வரும் வேளையில் சினிமா நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த தொல்லைகள் குறித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். ராதிகா ஆப்தே, ஸ்ரீரெட்டி உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து, நடிகை ரெஜினாவும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சென்னையில் ஒருமுறை நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு இளைஞர் தனது உதட்டை பிடித்து இழுத்தார். அதையடுத்து அந்த இளைஞரை தான் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக கூறியுள்ள ரெஜினா, இதுபோன்று இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறியுள்ளார் ரெஜினா....
