விஜய் ரசிகர்களுக்கு என் செங்கோலை தீபாவளிக்கு பரிசு – வருண் ராஜேந்திரன்
விஜய் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
‘சர்கார்’ படம், தான் எழுதிய ‘செங்கோல்’ கதையைத் திருடி எடுக்கப்பட்டுள்ளது என இணை இயக்குநரான வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.பாக்யராஜும், ‘செங்கோல்’ கதையில் இருந்து 95 சதவீதத்தைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 30) விசாரணைக்கு வந்தது. வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததால், பிரச்சினை சுமுகமாக முடிந்தது.
அதன்படி...
