குளியல் தொட்டியில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி… அதிரவைக்கும் கடைசி நிமிடங்கள்
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனங்களைக் கவர்ந்த ஸ்ரீதேவிக்கு, கடந்த சனிக்கிழமை கடைசி நாளாக அமைந்துவிட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து துபாய் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.
திருமண நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், அவர்களது இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் கடந்த வாரமே ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் காய்மா பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். துபாயில் உள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு போனி கபூர் மட்டும் மும்பை திரும்பிவிட்டார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சனிக்கிழமை மாலை மீண்டும் துபாய்க்குத் திரும்பிய போனி கபூர் ஸ்ரீதேவியின் அறைக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது துபாயில் மாலை 5.30 மணி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. த...
