விஜய்க்கு கதை சொன்ன சூர்யா இயக்குனர் கடுப்பில் சூர்யா
குட்டிப்புலி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் முத்தையா. முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கினார். அந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்து விஷாலை வைத்து ‘மருது’ படத்தை இயக்கினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை கொடுத்தது. இதனால் ரசிகர்களால் அறியப்படும் ஒரு இயக்குநராக உருவெடுத்தார் முத்தையா.
முத்தையாவின் வளர்ச்சியை பார்த்த நடிகர் சூர்யா தானாக அழைத்து அவருக்கு கால்ஷீட் கொடுத்ததுடன் தனது கம்பெனியே இந்த படத்தை தயாரிக்கும் என்றார். இந்த உற்சாகத்தில் சூர்வாவுக்கு தகுந்த மாதிரி முத்தையா கதையை செதுக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவரை அழைத்து விஜய்யும் ஒரு கதை கேட்டிருக்கிறார். முத்தையா சொன்ன கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாம்.
அப்புறமென்ன இது சூர்யாவின் காதுக்கு போக முத்தையாவின் கேரியரே சின்னாபின்னமாகிவிட்டது. தான...
