மணிரத்னம் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் – ஸ்வாதிஷ்டா
திரைத்துறையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் போஷாக்கின் சிறந்த கூறு என்ன தெரியுமா? 'ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சவாலை எதிர்கொண்டு அவைகளை தகர்த்தெறிதல். நடிகை ஸ்வாதிஷ்டா இந்த நிலையில் அதை உள்ளூர உணர்ந்தே இருக்கிறார். "திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி" எனக் கூறும் ஸ்வாதிஷ்டா தன் ஆரம்பத்திலேயே சவரக்கத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து, தொலைக்காட்சி தொகுப்பாளராக துவங்கிய ஸ்வாதிஷ்டாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். நான் ஜர்னலிஸம் படிக்கும்போதே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன, நான் தான் நடிக்க தயங்கினேன். ஆனால், மி...
