படப்பிடிப்பு நிறுத்தம் வேண்டாம்… தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் – FEFSI வலியுறுத்தல்
படப்பிடிப்பு நிறுத்தம் வேண்டாம்… தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் – FEFSI வலியுறுத்தல்
தமிழ்த் திரையுலகில் தற்போது முக்கியமான விவாதமாக மாறியிருக்கும் படப்பிடிப்பு தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக FEFSI தெரிவித்துள்ளது.
சமீபத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த முடிவு திரையுலகில் நேரடியாகப் பணியாற்றும் தொழிலாளர்களை மட்டுமல்லாமல், அவர்களைச் சார்ந்து வாழும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் பாதிக்கும் சூழல் உருவாகும் என்...
