தெய்வீக கதைக்களத்தில் மீண்டும் கைகோர்க்கும் என்.டி.ஆர் – திரிவிக்ரம்! இந்திய சினிமாவை அதிரவைக்கும் புதிய பிரம்மாண்ட படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தெய்வீக கதைக்களத்தில் மீண்டும் கைகோர்க்கும் என்.டி.ஆர் – திரிவிக்ரம்! இந்திய சினிமாவை அதிரவைக்கும் புதிய பிரம்மாண்ட படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை:
இந்திய சினிமாவில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நடிகர்–இயக்குநர் கூட்டணிகளில் ஒன்றான மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணைகின்றனர். இவர்களின் வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது இருவரும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்திற்காக மீண்டும் கைகோர்த்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் என்.டி.ஆர் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அறிவிப்பு போஸ்டரிலேயே படத்தின் மையக்கருவை உணர்த்தும் வகையில் திரிசூலமும் வேலும் ஒன்றிணைந்த வடி...


