த்ரிஷா – ராதிகா சரத்குமார் – அபர்ணா பாலமுரளி கூட்டணியில் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர்! லண்டனில் தொடங்கிய பிரம்மாண்ட படப்பிடிப்பு!i
த்ரிஷா – ராதிகா சரத்குமார் – அபர்ணா பாலமுரளி கூட்டணியில் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர்! லண்டனில் தொடங்கிய பிரம்மாண்ட படப்பிடிப்பு!
ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் பனோரமா ஸ்டுடியோஸின் முதல் தமிழ் திரைப்படம் உருவாகிறது!
தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த திறமையான நடிகைகளான த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்த புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்பட தயாரிப்பாகும். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், இருண்ட பின்னணியில் உருவாகும் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதைக்களத்தை மைய...
