Sunday, June 21
Shadow

Tag: #Vairamuthu

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை  – கவிஞர் வைரமுத்து

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – கவிஞர் வைரமுத்து

Latest News, Top Highlights
Lyric VideoDownload link https://www.transfernow.net/WQGn3U062020 YouTube Link https://www.youtube.com/watch?v=TIUkCI9F1CE ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் அமெரிக்கப் போலீஸ் கால்வைத்து அழுத்தியதில் அவர் இறந்து போனார். அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’. நிறவெறிக்கு எதிராக இன்று உலகமே சிலிர்த்து எழுந்திருக்கிறது. உலகத்தின் பெரும்பான்மை நாடுகளில் அந்தக் கிளர்ச்சி காட்டுத் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். நேற்று மாலை வெளியிடப்பட்ட ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற அந்தப் பாடல் உலகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழனின் குரல் இதோ... காற்று...
போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

Latest News, Top Highlights
மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என்று ' டிராஃபிக் ராமசாமி ' விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: " எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த...
தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

Latest News, Top Highlights
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் – திருமூலர் - ஆண்டாள் –– வள்ளலார் – மறைமலையடிகள் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் - புதுமைப்பித்தன் – கலைஞர் - கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது இவரது 16ஆவது கட்டுரையாகும். தமிழ் நூல்களில் மிகப் பழைமையானதும், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமாக அறியப்படுவதும் தொல்காப்பியம்தான் என்றும், இன்றுவரைக்குமான தமிழ்மொழி தொல்காப்பியத்தின் மீதுதா...
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வைரமுத்து நன்கொடை..!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வைரமுத்து நன்கொடை..!

Latest News, Top Highlights
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா இன்று பெற்றுக்கொண்டார். சென்னை லீ மெரிடியன் விடுதியில் நடந்த இவ்விழாவில் கவிஞர்கள் மூத்த கவிஞர்கள் முத்துலிங்கம், அறிவுமதி ஆகியோருடன் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து, நடிகர்கள் பாண்டியராஜன், ஜோ மல்லூரி, சு ப வீரபாண்டியன் மற்றும் தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்....
இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து

இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து

Latest News, Top Highlights
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் கவிதை வாழ்த்து பின்வருமாறு.. பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை “காற்றின் தேசம் எங்கும் - உந்தன் கானம் சென்று தங்கும் வாழும் லோகம் ஏழு...
ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? பாரதிராஜா கேள்வி

ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? பாரதிராஜா கேள்வி

Latest News, Top Highlights
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது. ஆனாலும், சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். வைரமுத்துவை விமர்சித்து வரும் எச்.ராஜாவுக்கு தனது கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனி மனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாக...