விக்ரம் மகன் துருவ் நடிக்க வரவில்லை இயக்குனர் பாலா அந்தர்பல்டி
சமீபமாக தமிழ் சினிமா மிகவும் அமைதியாக இருந்தது ஆனால் கடந்த மூன்று நாட்களாக புயலாக மாறியுள்ளது அதுவும் பாலா புயல் விக்ரம் மகனுக்கு எகிராக
கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை இயக்குநர்கள் பார்வையில் காட்டாமல் அதை அழிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் போர்க்குரல் எழுப்பினர்.
இந்நிலையில் பாலா நேற்று மௌனம் கலைத்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்…
“வர்மா படத்தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தைத் தரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிற...
