செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா
செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்”
காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா
சென்னை:
Anthony’s Atelier நிறுவனம் சார்பில் டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. காதல், தனிமை, மனதில் புதைந்திருக்கும் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படத்தின் கதைக்களம், கதாபாத்திரங்கள், உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
பொதுவாக காதல் கதைகள் என்றாலே காதலர்களின் சந்திப்பு, பிரிவு, இணைவு என நகரும் நிலையில், “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படம் காதலின் வழியாக ஒரு மனிதன...
