யுவன் சங்கர் ராஜாவின் காணமல் போன கார் தலையில் அடித்துக்கொண்ட போலீஸார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி பின்புறம் ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.
இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளனர்.
சாதிக் (34) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜா மதுரை சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர்.
நேற்று மாலை 5 மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் இரவு வரை திரும்ப வரவில்லை.
போன் செய்தபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் காருடன் மாயமான ஓட்டுநர் என எழும்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஓட்டுநருக்கு போலீஸார் போன் செய்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக...
