
தமிழ் சினிமாவின் பிரமாண்ட கூட்டணி என்று தான் இந்த இரண்டு பேரையும் சொல்லணும் ரஜினியின் சாதனையை தமிழில் அவருக்கு பிறகு விஜய்யாலும் சரி செய்ய முடியும் என்று நிரூபணம் பண்ணவர் என்று கூடசொல்லாம் அது மட்டும் இல்லாமல் விஜய்க்குள் இருந்த பல திறமையை வெளிகொணர்ந்தவர் தான் இயக்குனர் A.R.முருகதாஸ் இந்த இருவரும் இணைந்த இரண்டு படங்களும் நூறுகோடி கிளப்பில் இணைந்த படங்கள் என்று சொல்லணும். மீண்டும் இந்த கூட்டணி எப்ப சேரும் என்று எதிர்பார்த்த நமக்கு விருந்து தயார் அதுவும் சும்மா இல்ல உலக சினிமாவை கலக்கும் படமாக அது மட்டும் இல்லாமல் விஜய்யின் நீண்ட நாள் ஆசை தன் படம் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அந்த ஆசை இப்ப நிறைவேரபோகிறது .
இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் ஹீரோயினாகவும் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு துப்பாக்கி 2 என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூடவே ‘ஜகதீஷ் ரிட்டர்ன்ஸ்’ எனும் கேப்ஷனும் வரும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.