

நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே உடன் இணைந்து சமூக வலைதளங்களினால் ஏற்படும் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராமில் நடத்த உள்ளனர்.
சோ பாஸிடிவ் (So+) என்ற பெயரில் நாளை மாலை 7 மணிக்கு நடக்க உள்ள இந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே இருவரும் சோசியல் மீடியாவல் உண்டாகும் தொல்லை குறித்து லைவ்வாக ஆலோசிக்க உள்ளனர்.
சர்வதேச புகழ்பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழு ‘தி வாம்ப்ஸ்’ இன் முன்னணி கிதார் கலைஞரான ஜேம்ஸ் மெக்வே, சமூக ஊடககளில் நல்ல தகவல்களை பரவி வருகிறார். பாண்டே மற்றும் மெக்வே ஆகிய இருவருமே லைவ்வாக விவாதிக்க உள்ளது. வருவது, மொழி மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பை அளிப்பதேயே குறிக்கிறது.

இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான புள்ளிவிவரங்கள் சான்றாகும் உள்ளன. ஒவ்வொரு நாளிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அணுகக்கூடிய தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினையில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில், சமூக ஊடக தொல்லைகளுக்கு உள்ளான நபர்கள், பிரச்சினையை கையாளும் உதவியாக இருக்கும் என்று ஜேம்ஸ் மெக்வே கூறினார்,
இதுகுறித்து அனன்யா பாண்டே தெரிவிக்கையில், இந்த கடினமான நேரத்தில் முன்னெப்போதையும் விட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் வசிக்கும் இடம் அல்லது உங்கள் பின்னணி எதுவாக இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். நாங்கள் ஒன்றாக உரையாடுவது சமூக வலைதளங்களால் உண்டாகும் பல தொல்லைகள் முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்புகிறோம் என்றார்.
ஜேம்ஸ் மெக்வேயும் நானும் சமூக வலைத்தளங்கள் குறித்து கருத்துகளை எங்கள் சொந்த வழியில் உரையாற்ற உள்ளோம். உலகம் தற்போது ஒரு கடினமான நேரத்தை கடந்து செல்கிறது, மேலும் இது எல்லோரிடமும் கருணை காட்டுவதும், பாசிஸிடிவ் கருத்துகளை பரப்புவதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது. இதற்காக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
