
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா.
இவர் தனது நண்பரும், காதலருமான சினிமா பட தயாரிப்பாளர் நவீனை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கொச்சியில் எளிமையான முறையில் நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருமணம் அக்டோபர் 27-ந் தேதி நடைபெறே இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற 22-ஆம் தேதி பாவனாவுக்கும், நவீனுக்கும் உறவினர்கள் மத்தியில் திருச்சூரில் திருமணம் நடக்கவுள்ளது. நிச்சயதார்த்தத்தைப் போலவே திருமணத்தயைும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தனது திருமணம் பற்றி நடிகை பாவனா கூறியதாவது:-
வருகிற டிசம்பர் 22-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்கு விருப்பம் இல்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்க உள்ளோம். திரையுலகை சேர்ந்தவர்களில் யார்-யாரை அழைப்பது என்பதை நவீனுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். திருமணத்துக்கு பிறகு நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிப்பை தொடர்வதில் நவீனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
