
‘பாக்ஸர்’ மூலம் தமிழிலில் அறிமுகமாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தென்னிந்திய நடிகை சஞ்சனா கல்ராணி. 60-க்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களில் நடித்துள்ள மாடலான இவர், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களான பவன்கல்யாண், பிராபாஸ் ராஜூ, பூரி ஜெகநாத், மோகன்லால், தர்ஷன், சிவராஜ் குமார் மற்றும் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
யோகாவில் ஆர்வம் கொண்டவரான இவர் தற்போது பெண்களை மையமாக கொண்ட ஸ்வர்ணகாடகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ரோ யோகா, MMA பாக்சர், கத்தி சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை பாகுபலி பட புகழ் பெற்ற நிறுவனத்திடம் பெற்றுள்ளார்.
சுவர்ணகாடகம் மூன்று மொழிகளில் இந்திய தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் இடிவி தெலுங்கு, கலர்ஸ் பங்களா, கலர் ஓடியா ஆகியவற்றில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பபட்டு வருகிறது. 100 எபிசோடு கொண்ட இந்த தொடர் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதால், 160 எபிசோடுகள் இடந்த பயணித்து வருகிறது.
அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விவேக், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
இதுமட்டுமின்றி சஞ்சனா கல்ராணி நடித்த தமிழ் வெப் சீரியலான ஐவர் சீசன் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகை சஞ்சனா கல்ராணி புத்தம்புதிய கவர்ச்சி புகைப்படங்களை காண https://www.cinemapluz.com/actress-sanjjanaa-galrani-photoshoot-images/ கிளிக் செய்யவும்
