
’குற்றம் 23’ படத்திற்கு பிறகு அருண் விஜய் நடித்து வரும் அடுத்த படம் தடம். இப்படத்தை மகிழ் திருமேணி இயக்கி வருகிறார்.
படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் முக்கிய ஒரு தகவலை அருண் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் முதல் முறையாக அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம்.
எழில், கவின் என்ற இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். ரொமண்டிக் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகிகளாக தன்யா ஹாப், ஸ்மிரிதி மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கோபிநாத் ஏற்றுள்ளார். அருண் ராஜ் இசை அமைக்கிறார்.
