
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31 அன்று அறிவித்தார். இது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்கள் என பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
ரஜினிகாந்தின் நடிப்பில் நடிப்பில் அடுத்த படமாக ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இவரது பேட் மேன் படம் வரும் ஜனவரி 26 ல் வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பற்றி அகஷ்ய் குமாரிடம் மும்பை நிருபர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு அவர் ரஜினி நிச்சயமாக சிறந்த அரசியல் அதிகாரியாக வலம் வருவார் என கூறியுள்ளார்.
