
சமீபகாலமாக சிம்பு – ஓவியா பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சிம்புவும் ஓவியாவும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள்.
சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு – ஓவியா இருவரும் இணைந்து ‘மரண மட்டை’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைய இருக்கிறார்கள்.
ஆனால் நாயகன் – நாயகியாக இல்லாமல், அடுத்ததாக ஓவியா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இருவரும் இணையவிருக்கிறார்கள். அனிதா என்பவர் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது.
Bற்கனவே சிம்பு, சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கவிருப்பதாக வெளியான தகவலால் சிம்பு, ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
