Monday, August 10
Shadow

Tag: #மகேந்திரன்

இயக்குனர் மகேந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறும்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ்த் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்துப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது. இவர் இயக்கிய படங்கள்: முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழு...
மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு

மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு

Latest News, Top Highlights
மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் மனோ பாலா, பேரரசு, யார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோ பாலா, மகேந்திரன் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சங்கப் பொருளாளர் இயக்குநர் பேரரசு, மகேந்திரன் பெயரில் இயக்குநர் சங்கம் சார்பில் விருது வழங்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் மகேந்திரன் பெயரில் விருது ஒன்றை உருவாக்க கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்....
மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

Latest News, Top Highlights
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறனர். நடிகர் பார்த்திபன், வைரமுத்து, நடிகை சுகாசினி ஆகியோர் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ள நிலையில், சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்....
பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Latest News, Top Highlights
பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலக இயக்கநர்களின் கதாநயராகவும், வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் மறைந்த மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் சிம்புதேவன், நடிகை ரேவதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என்று வைரமுத்து இரங்கல் வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி- வைரமுத்து மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தார், கலையன்பர்களுக்கு இரங்கல் சொல்லிக்கொண்டு எனக்கு நானே ஆயுதல் கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்...

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை சுகாசினி இரங்கல்:  உடல் நலக்குறைவால் இன்று காலமான பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகை சுகாசினி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பத...
பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பல புகழ்பெற்ற படைப்புக்களை கொடுத்தவர் மகேந்திரன். முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் ஆகிய படங்களை இயக்கியவர் இவர். இதை தொடர்ந்து தற்போது தெறி, பேட்ட ஆகிய படங்களில் நடித்தும் அசத்தினர், இவர் குறித்து இவருடைய மகன் ஜான் மகேந்திரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ‘அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மகேந்திரன் மிகவும் உடல்நலம் முடியாமல் இருக்கின்றார் என்று தெரிய வந்துள்ளது, ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்....
பிரபல விளம்பரத்தை படத்தலைப்பாக்கிய மகேந்திரன்

பிரபல விளம்பரத்தை படத்தலைப்பாக்கிய மகேந்திரன்

Latest News, Top Highlights
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது நாயகனாக உயர்ந்திருப்பவர் மகேந்திரன். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சுந்தரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்புவதற்கு முன்பாக ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு...’ என்று புகைப்பிடிப்பதற்கு எதிரான விளம்பரம் ஒன்று திரையிடப்படும். தற்போது இந்த வசனத...
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
`புகழேந்தி என்னும் நான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இயக்குனர் மகேந்திரன் மூச்சுத்திணறல் மற்றும் அதிகமான ரத்த அழுத்த சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...