ராஜமௌலின் அடுத்த படைப்பு ஒரு கேங்ஸ்டர் படம்
இந்திய சினமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவை உண்மையில் திரும்ப பார்க்கவைத்த ஒரு இயக்குனர் என்றால் அது ராஜமௌலிதான் அவரின் பாகுபலி படம் அப்படி ஒரு மிரட்சியை உண்டுபண்ணியது
பாகுபலி-2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரணை இணைத்து மல்டி ஹீரோ படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெறுவதாக கூறியுள்ள அவர் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பினை தற்காலிகமாக வைத்துள்ளார்.
இந்த படம் எந்தமாதிரியான கதையில் உருவாகிறது என்பதை இன்னும் ராஜமவுலி அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது இப்படம் கேங்ஸ்டர் கதையில் தயாராகயிருப்பது தெரியவந்துள்ளது. இதில், கேங்ஸ்டர் வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, உயர் போலீஸ் அதிகாரியாக ராம் சரண் நடிக்கிறாராம். அதனால் அவர்கள் இருவரையும் உடல்ரீதியாக தங்களை தயார்படுத்த, டிரைனர்களை வைத்து தீவிர பயிற்சி கொடுத்து வருகிறார...
