நாடோடிகள் 2 திரை விமர்சனம் ( உணர்வும் உணர்ச்சியும்) Rank 4/5
சமூக சேவகர் ஜீவா (சசிகுமார்), தனக்கு திருமணம் நடந்த முதல் நாள் இரவில், தான் திருமணம் செய்ய உள்ள பெண், கட்டாயத்தின் பேரில் தன்னை திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளதை தெரிந்து கொள்கிறார். இதையடுத்து அந்த பெண்ணை அவளது காதலியிடம் சேர்க்க முயற்சிகிறார் சமூக சேவகர். ஆனால் பெண்ணின் குடும்பம், அவர்களை கவுரவ கொலை செய்ய முயற்சிகிறது. இதையறிந்த சமூக சேவகர் அந்த பெண்னையும், அவளது காதலனையும் காப்பற்றினாரா என்பதே படத்தின் கதை.
ஒருவரியில் சொன்னால் தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா-ஷங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம்.
சமுதாயத்தில் தவறாக இருக்கும் சில விஷயங்கள், குறிப்பாக ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார். அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி.
தினமும் வீதியில் போராட்டம், வாங்கும் சம்பளத்தை கூட வீட்டில் கொடுப்...