காவேரி போராட்டத்தில் அஜித்தை காணோம் என்று சொன்னவர்கள் இவர்களை ஏன் தேடவில்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கன்னடத்து தமிழ் நடிகர்களான பிரகாஷ்ராஜ், அர்ஜுன் , அதர்வா முரளி, பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிவகுமார்,கார்த்தி, சத்யராஜ், பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் கன்னடத்து நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவால் பிரபலமடைந்த கர்நடாகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், அர்ஜூன், அதர்வா, பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்தில் வந்த நடிகர்கள் பிரபலம...
