“நாகபந்தம் வெறும் திரைப்படமல்ல; இந்திய பாரம்பரியம், மர்மம் மற்றும் பிரம்மாண்டத்தின் திரை விழா” – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை!
“நாகபந்தம் வெறும் திரைப்படமல்ல; இந்திய பாரம்பரியம், மர்மம் மற்றும் பிரம்மாண்டத்தின் திரை விழா” – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை!
சென்னை:
புராணங்கள், கோவில் மர்மங்கள், சாகசம் மற்றும் நவீன தொழில்நுட்ப காட்சியமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.
வழக்கமான திரைப்பட விளம்பர நிகழ்வாக இல்லாமல், இந்திய கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றமாக இந்த நிகழ்வு அமைந்தது. திரைப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, “நாகபந்தம்” ரசிகர்களுக்கு எந்த வகையான அனுபவத்தை வழங்கப் போகிறது என்பதைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர...
