இமைக்கா நொடிகள்’ வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி – அதர்வா முரளி!
ஏதாவது ஒன்றின் மீது முழு நம்பிக்கையையும் வைத்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நடிகர் அதர்வா முரளியை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இமைக்கா நொடிகள் படத்தை பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் வெறும் ஒரு படமாக மட்டும் பார்க்காமல் படத்தின் அத்தனை நிலைகளிலும் உறுதியாக அதனோடு நின்றிருக்கிறார். கதை உருவாக்கம், படம் ரிலீஸ் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது வரை அதர்வாவின் ஈடுபாட்டை பற்றி சொன்னால் மிகையாகாது. படம் உருவாகும் முன்பே அதை அவர் தீவிரமாக எது நம்ப வைத்தது.
அதைப்பற்றி அதர்வா முரளி கூறும்போது, "டிமாண்டி காலனி படத்திற்கு முன்பே அஜய் ஞானமுத்து இந்த கதையை எனக்கு சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் இந்த படத்தை செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு நடிகருக்கும் இந்த கதை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் உறுதியாக நம்பினேன். இப்போது படத...
