“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்”
“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்”
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளுக்கென தனி அடையாளம் பெற்றுள்ள தயாரிப்பு நிறுவனமான Vels Film International, தனது 32வது தயாரிப்பை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. “96”, “மெய்யழகன்” போன்ற மனதை வருடிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் C. Prem Kumar, இம்முறை மலையாள திரையுலகின் திறமையான நடிகர் சகத் பாசில் உடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார்.
படத்தின் பூஜை இன்று எளிமையுடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டணி பற்றிய செய்தியே தற்போது திரையுலகில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. உணர்வுகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து தன்னை நிரூபித்து வரும் பகத் பாசில் — இந்த...
