உலக ரசிகர்களை மீண்டும் மர்மத்தில் மூழ்கடிக்க வருகிறது ‘வதந்தி’ சீசன் 2… ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்!
உலக ரசிகர்களை மீண்டும் மர்மத்தில் மூழ்கடிக்க வருகிறது 'வதந்தி' சீசன் 2... ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்!
சென்னை, ஜூலை 27:
தமிழில் உருவாகி, முதல் சீசனிலேயே பரபரப்பான வரவேற்பைப் பெற்ற 'வதந்தி' வெப் சீரிஸ், தற்போது இன்னும் அதிக சஸ்பென்ஸ் மற்றும் மர்மங்களுடன் இரண்டாவது சீசனாக ரசிகர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது. 'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த புதிய தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இந்த முறை, கதைக்களம் மதுரையின் மண்ணையும், அங்குள்ள பாரம்பரிய வாழ்க்கை முறையையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியையும் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை, அரசியல் பின்னணி, மனித உறவுகளின் சிக்கல்கள், வதந்திகள் உருவாக்கும் தாக்கம் மற்றும் உண்மைக்கான போராட்டம் ஆகியவை கதையின் மையமாக அமைகின்றன.
இயக...
