மீண்டும் ஓவியாவை ஏமாற்றிய ஆரவ்
கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானதன் மூலம், மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரவ். திருச்சியை சேர்ந்த மாடலான இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில், துல்கர் சல்மானுடன் வேலைபார்ப்பவராக சிறு வேடத்தில் தலையைக்காட்டியவர். விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். தவிர 'ஒரு கப் காபி' என்ற குறும்படத்திலும் நடித்துள்ள ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பேசப்பட்டார்.
நடிகை ஓவியா உடனான காதல் விவகாரத்தினால் ஆரவ்வுக்கு பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. பிக்பாஸ் சீஸன் ஒன்னில் வெற்றிபெற்று, டைட்டிலை தட்டிச் சென்றதும் ஆரவ் பல படங்களில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், 'ராஜபீமா' என்ற படத்தில் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகிறா...

