இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்
மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது..
இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்ஷன் மற்றும் டைரக்ஷன் மேற்ப்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்..
தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்..
குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS அவர்களுக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..
ஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த ...
