செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை!
செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை!
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு
சென்னை, ஆகஸ்ட் 22:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், செப்டம்பர் 1, 2026 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்துவது என தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
