“தோல்வி அல்ல, அது ஒரு பாடம்!” – இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்த ஸ்ருதிஹாசன்
“தோல்வி அல்ல, அது ஒரு பாடம்!” – இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்த ஸ்ருதிஹாசன்
வெற்றி என்பது வெறும் கோப்பைகளாலும் பதக்கங்களாலும் மட்டுமே அளவிடப்படுவதில்லை; கடினமான சூழ்நிலைகளை கடந்து தொடர்ந்து பயணிப்பதிலும் அதன் உண்மையான அர்த்தம் இருக்கிறது என்கிறார் நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் இரண்டாவது சீசன் போட்டியில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், தனது குரலால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இளம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான “சஞ்சாரி” பாடலை பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
நிகழ்வில் பேசிய அவர், வாழ்க்கையிலும் விளையாட்டிலும் சவால்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஒரு செயலை உண்மையாக நேசிக்கும் போது அந்த சவால்களே நம்மை வளர்க்கும் அனுபவங்களாக மாறி...
