“தனுஷின் நடிப்பும், சாய் பல்லவியின் இயல்பும் எனக்கு இன்ஸ்பிரேஷன்!” – நடிகை வர்ஷினி கார்மேகம்
“தனுஷின் நடிப்பும், சாய் பல்லவியின் இயல்பும் எனக்கு இன்ஸ்பிரேஷன்!” – நடிகை வர்ஷினி கார்மேகம்
கோயம்புத்தூரில் இயற்பியல் படிப்பு முதல் திரையுலகப் பயணம் வரை… ‘மொத ராத்திரி’ மூலம் கவனம் ஈர்க்கும் வர்ஷினி
கோயம்புத்தூரில் இயற்பியல் படித்த இளம் பெண் ஒருவர், குறும்படங்கள் மற்றும் மேடை நாடகங்கள் வழியாக நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தற்போது வெள்ளித்திரையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் தான் நடிகை வர்ஷினி கார்மேகம். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்ஷினி, தனது திரையுலக அனுபவங்கள், நடிப்பின் மீதான ஆர்வம் மற்றும் தனக்கு பிடித்த நடிகர்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர் வர்ஷினி. படிப்பில் கவனம் செலுத்தியபோதிலும், கலை மற்றும் நடிப்பு மீதான ஈர்ப்பு அவருக்குள் தொடர்ந்து இர...
