விஷாலின் வில்லங்க பேச்சு ஊடகங்களின் கோவம் சமாளிப்பார விஷால்?
நெருப்புடா பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர்
விஷால் பேசும்போது,
திரைப்படங்களுக்கான விமர்சனத்தை மூன்று நாட்கள் கழித்துத்தான் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
படம் உங்கள் முதலீடு,பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை.
விமர்சனம் என்பதே கருத்து பரிமாற்றம். அது சரி தவறு என்பதை படிக்கிறவன் தீர்மானிக்க வேண்டியது. விமர்சனம் வியாபாரமல்ல.
சிறுபடங்கள் ஜோக்கர், மாநகரம், துருவங்கள் 16, போன்ற படங்கள் ரீலீசுக்கு முன்னரே பத்திரிகையாளர்களுக்கு,திரையிட்டு காட்டப்பட்டதால் அப்படங்கள் பற்றி பத்திரிகைகள் நேர்மையானவிமர்சனங்களை எழுதியதால். படங்கள் வெற்றி பெற்றன.
பெரிய படங்களுக்குத்தான் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் ஓவராக புகழ்வதும், சுமாராக இருந்தால் அதை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்குவதும் நடக்கிறது.
இருமுகன், கபாலி படங்கள் விமர்சனத்துக்குப் பின்...
