வின்செண்ட் அசோகன் – சோனியா அகர்வால் நடிக்கும் “ எவனவன் “
டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ எவனவன் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். மற்றும் அகில் சந்தோஷ் என்ற புதுமுகத்துடன், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் J.நட்டிகுமார். இவர் தந்தை ஜானகிராமன் மோகமுள் உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர்.
நட்டிகுமார் அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர், அத்துடன் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற “ மெய்ப் பொருள் “ என்ற படத்தையும், பனித்துளி படத்தையும் இயக்கியவர். அவரிடம் படத்தை பற்றி கேட்டோம்..
எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்...
