மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.
இவர் இசையமைத்த தமிழ்ப் படங்கள்: யூத், மலை மலை, வெற்றிச்செல்வன், ஏழுமலை, திருப்பாச்சி, ஷாஜகான், சுறா, போக்கிரி
கொடுரி மரகதமணி கீரவாணி, இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்றது. 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்
இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள...
பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார். இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார். இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர். பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவ...
டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.
இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்: மாப்பிள்ளை, ஆத்மசாந்தி, அன்பு, அம்மையப்பன், குடும்பவிளக்கு, ரம்பையின் காதல், ராஜா ராணி, ஆசை, ரங்கோன் ராதா, மல்லிகா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, குறவஞ்சி, விஜயபுரி வீரன், நல்லவன் வாழ்வான், குமார ராஜா, எதையும் தாங்கும் இதயம், சீமான் பெற்ற செல்வங்கள், அருணகிரிநாதர், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு, பந்தயம், டீச்சரம்மா, அவரே என் தெய்வம், ஏன், அருட்பெருஞ்ஜோதி, மறுபிறவி, அவசர கல்யாணம், வைரம், வாயில்லாப்பூச்சி...
கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார்.
இவர் இசையமைத்துள்ள சில திரைப்படங்கள்: மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், ரகசியமாய், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, நாளை, மனதோடு மழைக்காலம், சகாப்தம், முருகா...
கே. வி. மகாதேவன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவா...
இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'சிக்ஸர்'.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட் நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இடம்பெறும் "நீ எங்கவேனா கோச்சிக்கினு" என்ற பாடலை பாடியுள்ளார்.
மேலும் மிக அருமையான இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்....
சந்தோஷ் நாராயணன் ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.
இவர் இசையமைத்த படங்கள்: என்னை தெரியுமா?, அட்டகத்தி, உயிர் மொழி, பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், இறுதி சுற்று...
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.
இவர் இசையமைத்த திரைப்படங்கள்: சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம்...
ராஜேஷ் முருகேசன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டில், இவரது இசையமைப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் சிறப்பான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
ராஜேஷ் முருகேசன், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு தமிழ்ப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். கொச்சி ரெபினெரிசு பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், 2008ஆம் ஆண்டில் சென்னை எஸ்.ஏ.இ பன்னாட்டுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பிஸ்தா பாடலின் மூலமாக பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாளத் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம...