
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தி வருபவர்.
இவருடைய காவலன் பட ரீலீஸின் போது அந்த படத்தின் நாயகி அசினுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சில வேண்டுகோளை வைத்தார், அது என்னவென்றால் நண்பா என்னுடைய படத்தை பாருங்க, சந்தோசமா இருங்க ஆனால் இந்த பாலபிஷேகம் இதெல்லாம் வேண்டாம், அதை பட்டினியில் வாடுற குடும்பங்களுக்கு வாங்கி கொடுங்க என கூறி இருந்தார்.
ஆனால் இன்னும் சில ரசிகர்கள் விஜய் இந்த கோரிக்கையை ஏற்காமல் இருப்பது நிச்சயம் அவருக்கே வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
