
ஆர்த்தி அகர்வால் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
