Sunday, April 26
Shadow

விஜய் படத்தை நேரடியாகவே பொதுமேடையில் தாக்கி பேசிய தன்ஷிகா

விழித்துரு படம் மிக சிறந்த படம் ஆனால் எல்லோராலும் கவனிக்க படவில்லை அதையும் மீறி இந்த படம் வெற்றி பெற்றது இந்த படத்தின் ரெலீசெக்கு எத்தனை பிரச்சனை அதை மீறி தான் இந்த படம் வெளியானது வெற்றியும் பெற்றது நேற்று இந்த படத்துக்கான வெற்றி சந்திப்பு நடந்தது அதில் பலர் வெற்றிக்கு நன்றி சொன்னார்கள். ஆனால் இப்படத்தின் நாயகி தன்ஷிகா பேசியது அனைவரையும் கொஞ்சம் யோசிக்கவைத்தது என்று தான் சொல்லணும்.

இதே ஒரு முன்னனி நடிகர் படங்கள் என்றால் அனைவரும் அதரவு கொடுக்கிறார்கள் ஆனால் எங்கள் படம் எத்தனையோ இன்னல்களை சந்தித்தது அந்த நேரம் எங்களுக்கு யாரும் ஆதவு கொடுக்கவில்லை எங்கள் இயக்குனர் மீரா கதிரவன் இந்த படத்தை வெளியிட கிட்டத்தட்ட ஐந்து வருட போராட்டம் நடத்தினர் எத்தனை இன்னல்கள் துயரங்கள் இருந்தும் போராடி இந்த படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளோம்

இதே ஒரு பெரிய படத்துக்கு ஒரு பிரச்சனை என்றல் எல்லோரும் ஓடி வந்து உதவி செய்கிறார்கள். “தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது எங்கள் படத்தை கவனிக்கவில்லை. காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது தான் எனக்கு அப்போது புரிந்தது.” என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை பற்ற குற்றம் சாட்டினார்.

“நான் இப்போ தைரியமா பேசலைனா வேறு எப்போ பேச முடியும். நான் மற்ற மொழிகளில் நடிக்கிறேன். அங்கெல்லாம் படம் கான்செப்ட் நன்றாக இருந்தால் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமாஅப்படி இல்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

அதே போல அவரை எடையில் திட்டிய நடிகர் மற்றும் இயக்குனரும் டி.ஆருக்கும் பதிலடி கொடுத்தார் . ஒரு ஆன்மீகவாதி பொது இடங்களில் மற்றவர்களை இழிவாகவும் கொவபடவும் மாட்டார்கள்

Leave a Reply