
தமிழ் சினிமாவை மிகவும் பாதிக்க வைத்த விஷயம் என்றால் அது கேளிக்கை வரி மற்றும் GST தான் இதனால் தமிழ் சினிமாவே ஸ்தம்பித்தது என்று தான் சொல்லணும் இதற்கா மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து குரல் கொடுத்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் மற்றும் டி.ஆர் தான் முதலில் குரல் கொடுத்தது அடுத்து இவர்கள் எல்லாம் கொடுத்து விட்டார்கள் அதனாலும் நாம் கொடுத்தே ஆகவேண்டும் என்று ரஜினிகாந்த் இருப்பினும் யார் எப்படியாவது போங்க நாங்கள் எங்கள் வருமானத்தை மட்டும் பார்க்கிறோம் என்று விஜய் மற்றும் அஜித் இதுவரை மௌனம் காத்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் GST வரி முறை அமலுக்கு வந்தது. இதனால் தமிழ் சினிமாவிற்கு 28% வரி விதித்திருந்தது. மேலும் மாநில அரசின் கேளிக்கை வரி என்ற பெயரில் 30% வரியை வைத்திருந்தது.
இந்த இரண்டு வகையான வரியையும் சேர்த்து படம் ஒன்றிற்கு 58% வரை வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியிருந்தது.
இதனால் தமிழ் சினிமா துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நலிவடைந்து விடும் என பலர் குரல் கொடுத்து வந்தனர்.
இது பற்றி பேசிய ஜெயம் ரவி, ” தமிழ் சினிமாவிற்கே மிக பெரிய ஆபத்து நேர்ந்துள்ள போதிலும் அஜித்,விஜய் ஆகியோர் இது பற்றி வாய் திறக்காமல் இருப்பதும் ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இவர்கள் மௌனமாக இருப்பது அனைவருக்கும் வருத்தமளிப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தற்போது திரைப்பட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு திரையரங்குகளில் படங்கள் மீண்டும் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.