Wednesday, April 30
Shadow

பிக் பாஸ் வீட்டில் கமலிடம் அசிங்க பட்ட ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் வையாபுரி, சினேகன், ஆரவ் மற்றும் காஜல் ஆகியோர் இருந்தனர், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அறிவிப்பதற்கு முன்னர் யார் வெளியேறினால் மிஸ் செய்வீர்கள் என அனைவரிடமும் கேட்டு கொண்டு வந்தார்.

அப்போது ஜூலியிடம் கேட்கும் போது மூன்று பேரில் யார் வெளியேறினாலும் நான் பீல் பண்ணுவேன், ஏன்னா நான் அவங்களை சமமாக தான் பார்க்கறேன் என அப்பட்டமாக கூறினார்.

பின்னர் கமல் சரி போதும் நாரதர் வேலை என கூறினார், இதனால் ஜூலியின் முகம் உடனே சுருங்கத் தொடங்கியது, இதனால் கமல் நான் உங்களை சொல்லல, என்னைய சொன்னேன் என கூறி மழுப்பினார்.

ஆனாலும் ஆடியன்ஸ் அவர் யாரை சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டு கை தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply