
“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா
அம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய அவர், தனது மனதில் தற்போது நிறைந்திருப்பது நன்றியுணர்வு மட்டுமே என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
“அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அனைவரும் ஒன்றாக வந்து எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இத்தனை அன்புடன் வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், “இன்று உங்களுக்காக நாங்கள் இந்த நாளை கொண்டாடுகிறோம். நீங்கள் அமர்ந்து இந்த நிகழ்வைப் பார்க்கும்போது, உங்கள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை வந்தாலே எனக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை” என்றார்.
அம்மாவின் குரல் மீதான தனது அன்பையும் அவர் வெளிப்படுத்தினார். “உங்கள் குரலில் தனித்துவமான ஒரு சக்தி இருக்கிறது. அந்தக் குரலைக் கேட்கும்போதெல்லாம், நான் உண்மையாகவே கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், “உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். உங்கள் ஆசீர்வாதமும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளும் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும். என்னால் முடிந்த சிறந்ததை நிச்சயமாக செய்வேன்” என அவர் உறுதியளித்தார்.
இறுதியில், அம்மாவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், “Happy Birthday, அம்மா. Thank you so much” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

“Listening to MS Amma’s Voice Makes Me Feel Like I’m in God’s Presence,” Says Rashmika Emotionally
Rashmika, who attended her mother’s birthday celebration, expressed her heartfelt gratitude to everyone who joined the special occasion. She said that her heart was filled with nothing but gratitude at the moment.
“Seeing everyone come together and join us to celebrate Amma’s birthday brings me immense happiness and pride. My heartfelt thanks to everyone who came with so much love and made this celebration special,” she said.
Extending her birthday wishes to her mother, Rashmika added, “Today, we are celebrating this day for you. When you sit and watch this event, if even a small smile appears on your face, there is no greater happiness for me than that.”
She also spoke emotionally about her mother’s voice and the special place it holds in her heart.
“There is a unique power in your voice. Whenever I hear your voice, I truly feel as though I am sitting in the presence of God,” she said.
Rashmika further expressed her gratitude for being a part of her mother’s life.
“I will always be grateful that you gave me the opportunity to be a small part of your life. I hope your blessings, along with the wishes of your family and well-wishers, will always be with me. I will certainly do my very best,” she assured.
She concluded her speech by once again wishing her mother a happy birthday, saying, “Happy Birthday, Amma. Thank you so much.”
